Tuesday , 1 April 2025
Home Cinema News நான் ஜெயிக்கனும்னு ரொம்ப ஆசைப்பட்ட நண்பன், இப்போ என் கூட இல்லை- வருத்தத்தில் சந்தானம்…. நட்புனா இப்படில இருக்கணும்!
Cinema News

நான் ஜெயிக்கனும்னு ரொம்ப ஆசைப்பட்ட நண்பன், இப்போ என் கூட இல்லை- வருத்தத்தில் சந்தானம்…. நட்புனா இப்படில இருக்கணும்!

santhanam talks about his friend who was the main reason for his success

விஜய் டிவி To சினிமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் சந்தானம். “லொள்ளு சபா” நிகழ்ச்சியில் நடித்துகொண்டிருந்தபோதே இவருக்கென்று ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் இருந்தது. அதன் பின் “மன்மதன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார் சந்தானம்.

santhanam talks about his friend who was the main reason for his success

அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் கவுண்ட்டர் வசனங்களில் கலக்கிய சந்தானம், தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத காமெடியனாக உருவானார். ஒரு காலகட்டத்திற்கு பிறகு சந்தானம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன் பின் தற்போது சந்தானம் கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார். 

என் ஆருயிர் நண்பன்…

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரிக்கை பேட்டியில் சந்தானம் தனது ஆருயிர் நண்பனை குறித்த ஒரு நெகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். “சினிமா உலகத்திற்கு வந்து பிரபலமான பின்பு எல்லோருக்கும் பல நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் அப்படி நான் புகழடைவதற்கு முன்பே எனது வாழ்க்கையில் முக்கிய அங்கமாக இருந்தவன்தான் எனது நண்பன் ஜிலானி. 

santhanam talks about his friend who was the main reason for his success

அவன் ஒரு பணக்கார வீட்டு பையன். அவனோடு ஒப்பிட்டால் நானெல்லாம் ஒன்றுமே இல்லை. ஆனால் எப்போதுமே அவனுடைய காரில் என்னை ஏற்றிக்கொண்டு சுற்றிக்கொண்டே இருப்பான். அந்த சமயத்தில் லொள்ளு சபா நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்ததால் பல கல்லூரி விழாக்களிலே என்னை அழைப்பார்கள். அது போன்ற கல்லூரி விழாக்களில் பல நடிகர்கள் ஆடம்பர காரில் வந்து இறங்குவார்கள். அந்த விழாக்களுக்கு ஆட்டோ ரிக்சாவில் போவதற்கு கூட என்னிடம் காசு இருக்காது. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் கூட தன்னுடைய விலை உயர்ந்த காரில் என்னை ஏற்றி அந்த விழாக்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு அந்த டிரைவரிடம் விழா முடியும் வரை இருந்து இவனை அழைத்துக்கொண்டு வா என்று சொல்லி அனுப்புவான் ஜிலானி. 

என்னுடைய முன்னேற்றத்தில் அவனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அப்படிப்பட்ட ஆத்மார்த்தமான நண்பனை இப்போது இழந்துவிட்டேன் என்று நினைக்கும்போதுதான் என் மனதுக்கு அவ்வளவு வருத்தமாக இருக்கிறது” என கூறியிருக்கிறார். இந்த தகவலை தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். 

  • trisha shared the photos which she took with ramya krishnan, suriya, jyothika எல்லோரும் இணையும்போது பலம் கூடுது- ரம்யா கிருஷ்ணன், ஜோதிகா ஆகியோருடன் திரிஷா வெளியிட்ட உருக்கமான வீடியோ…
  • Related Articles

    trisha shared the photos which she took with ramya krishnan, suriya, jyothika
    Cinema News

    எல்லோரும் இணையும்போது பலம் கூடுது- ரம்யா கிருஷ்ணன், ஜோதிகா ஆகியோருடன் திரிஷா வெளியிட்ட உருக்கமான வீடியோ…

    90ஸ் கிட்ஸின் கனவுக்கன்னி 90களில் பிறந்தவர்களிடையே மறக்க முடியாத நடிகையான உருவானவர் திரிஷா. “ஜோடி” திரைப்படத்தில்...

    L2 empuraan movie makers cut ad mute dialogues
    Cinema News

    எம்புரான் படத்தின் வசனங்களை Mute செய்ய முடிவு! பல காட்சிகளை நீக்கவும் திட்டம்? ஏன் இப்படி?

    மாஸ் ஹிட் “L2 எம்புரான்” திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு...

    jiiva said the process of selecting hero in boss engira bhaskaran movie
    Cinema News

    சீட்டு குலுக்கிப் போட்டு ஹீரோவை செலக்ட் பண்ணாங்க? ஜீவா சொன்ன ஆச்சர்ய தகவல்! சினிமாவுல இப்படியெல்லாம் நடக்குமா?

    சரிவை கண்ட நடிகர் ஜீவா தமிழ் சினிமாவிற்குள் நடிக்க வந்த புதிதில் இளம் கதாநாயகனாக, கோலிவுட்டில்...

    devayani not even acted in single super star rajinikanth movie
    Cinema News

    இவ்வளவு பெரிய நடிகையா இருந்தும் சூப்பர் ஸ்டார்  கூட நடிக்கலையா? என்னப்பா இது!

    நிரந்தர சூப்பர் ஸ்டார் ஒரு சாதாரண பேருந்து நடத்துனராக இருந்த ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவின்...