கங்குவா மீதான விமர்சனம்
கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே பேன் இந்திய திரைப்படமாக வெளிவந்த திரைப்படம் “கங்குவா”. சிவா இத்திரைப்படத்தை இயக்க சூர்யா, திசா படானி, யோகி பாபு, பாபி தியோல், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற பலரும் இதில் நடித்திருந்தனர். ஒரு Fantasy திரைப்படமாக வெளிவந்த இத்திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. அதே போல் இத்திரைப்படம் படுமோசமான விமர்சனங்களையும் சந்தித்தது.

நடிகர்களுக்கு கருணை காட்டுங்க….
இந்த நிலையில் “அலங்கு” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குனர் மிஷ்கின், “கங்குவா திரைப்படம் தோல்வியடைந்த போது பலரும் விமர்சித்தார்கள். அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஒரு படத்தில் நியாயமும் தர்மமும் இருந்தால் அத்திரைப்படம் ரசிகர்களை நல்லவிதமாக சென்றடையும். இன்றைய காலகட்டத்தில் இன்ஸ்டாவில் ஒன்னே கால் நிமிடங்கள் படம் பார்க்கிறார்கள். ரசிகர்கள் ஓடிடியில் அதிக திரைப்படங்களை பார்க்கிறார்கள். இதை எல்லாம் மீறி அவர்கள் ஒரு பவர்ஃபுல்லான கதையை எதிர்பார்க்க்கிறார்கள். நாமும் படித்து வளர்கிறோம். அவர்கள் நம்மை விட அதிகம் படித்து வளருகிறார்கள்.

எனினும் நடிகர்களுக்கு கொஞ்சம் கருணை காட்டுங்கள். சூர்யா மாதிரியான ஒரு நல்ல நடிகரை நாம் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.